நீயும் நானும் நடந்து சென்ற
பாதை அப்படியே உள்ளது ..நீண்டதாய் .. முடிவற்றதாய் …
இன்றும் மழை தூறி கொண்டு தான் இருக்கின்றது …
தேடி கொண்டிருக்கிறேன் நாம் விட்டு சென்ற சுவடுகளை..
*********
கை மூடி திறக்கும் பொழுதெல்லாம்
கசிந்து கொண்டிருக்கிறது ..
உன்னை பற்றிய ஏதேனும் ஒரு நினைவு…
*********
அழைத்து ,மறுத்து சிரித்து பழகிய
உன் ஓசை மட்டும் ஒலித்து கொண்டிருக்கிறது ……
************
வெளியேறிய காற்றில் கரைந்து சென்றாய்
அழகியதொரு சங்கீதமாய்…
வாசித்து முடிந்தபின் வெறும் துளைகள்
மட்டும் கொண்டதாய் எனது புல்லாங்குழல்..
*************
விட்டு விட்டு பெய்து கொண்டிருக்கிறது மழை..
உனது நினைவுகளும்…
**********
இந்த நீ யார்?